இன்று முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை என்கிறார் காஞ்சன....

 இன்று முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை என்கிறார் காஞ்சன....

நாடளாவிய ரீதியில் இன்று (பெப் 16) முதல்  தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரியை கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன்படி  22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்  அமைச்சர் காஞ்சன விஜேசேகர  கூறியுள்ளார்

மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக  தெரிவித்துள்ள அவர், இதனை உடனடியாக அமுல்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

Comments