இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இராஜினாமா.......

 இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இராஜினாமா.......

இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் இந்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இரகசிய புலனாய்வு விசாரணையில் சேத்தன் சர்மா, 'விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்சினைகள் இருந்தன. கிரிக்கெட் சபையை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். எவரும் அவரைத் தொட முடியாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இந்திய வீரர்கள் உடல் தகுதி பெறாத நிலையில் ஊக்க மருந்து எடுத்து கொண்டனர்' என சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா மீது இந்திய அணி நிர்வாகம் தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா இன்று (17) இராஜினாமா செய்திருக்கிறார். அவரது இராஜினாமாவை இந்திய கிரிக்கெட் சபை எற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments