ஓட்டமாவடி பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு!!

 ஓட்டமாவடி பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு!!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமானது.

பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன், பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. அத்துடன், பிரதேச செயலக வளாகத்தில் சிரமதானம மேற்கொள்ளப்பட்டதுடன், ஊழியர்களுக்கு பாற்சோறும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்அமீன், பிரதித்திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.சஜ்ஜாத், பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், நிருவாக உத்தியேகத்தர் எஸ்.ஏ.ஹமீட் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








Comments