கல்குடா ஏவிசன் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பிரமாண்ட 75வது சுதந்திர தின நிகழ்வு!!

 கல்குடா ஏவிசன் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பிரமாண்ட 75வது சுதந்திர தின நிகழ்வு!!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏவிசன் கல்குடா அமைப்பினால் “போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் - இன ஐக்கியத்தை மேம்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு ஓட்டமாவடி பாலத்திற்கருகில் இடம்பெற்றது.
ஏவிசன் கல்குடா அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ.சதீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், 06வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் லசந்த ரத்நாயக்க, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்அமீன், பிரதேச செயலக பிரதி திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மும்மதத் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதான வீதியிலிருந்து சுதந்திர தின ஊர்வலம் பிரதேச கலை நிகழ்ச்சிகளுடன் பாலத்தடிக்கு வருகை தந்ததுடன், ஓட்டமாவடி ஆற்றில் நீச்சல் போட்டி, தோணியோட்டப்போட்டி, நீரில் மூழ்குபுவர்களைக் காப்பாற்றுதல், பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
இதன் போது பிரதேசத்தின் மூத்த சுழியோடிகள், கொரோனா ஜனாஸா நல்லடக்கத்தில் ஈடுபட்டவர்கள், சமூக முன்னோடிகள் எனப்பலருக்கு நினைவுசின்னம் வழங்கி ஏவிசன் கல்குடா அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.







Comments