அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34,000 ஆசிரியர் நியமனங்கள்.......

 அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34,000 ஆசிரியர் நியமனங்கள்.......

புதிய பாடசாலை தவணை மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கல்வி அமைச்சு 26,000 புதிய பட்டதாரி ஆசிரியர்களையும் 8,000 விஞ்ஞான கல்லூரி ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான அமைச்சரவை மீளாய்வுக் குழுவொன்றின் மூலம் அமைச்சர் பிரேமஜயந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான விசேட அனுமதியைப் பெற்றிருந்தார். 40 வயதுக்குட்பட்ட அரசுப் பணியில் பட்டதாரிகள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெப்ரவரி 10 வரை அவகாசம் உள்ளது.

அவர்களில் சிலர் க.பொ.த. உயர்தர பாடங்களை கற்பிக்க நியமிக்கப்படுவார்கள். ஆரம்பநிலை முதல் சாதாரண தர மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 8,000 விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர்களை நியமிக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் 12,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

கல்வி அமைச்சு தேசிய பாடசாலைகளில் புதிதாக 4,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவுள்ளது. மீதமுள்ள 22,000 பேர் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தாலும்இ மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள பகுதிகளில் இவர்களை நியமிக்க கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.

Comments