"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும்............

 "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும்............



"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி சசிகலாராணி ஜெயராம் தலைமையில் எதிர்வரும் 19.02.2023 திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இடம்பெறவுள்ள "சதங்கை நாதாம்ருதம் - 02" நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்தோடு நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வில் சிறப்பு மற்றும் விசேட அதிதிகளாக மேலும் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது "கலார்ப்பணம்" நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன், "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் மாணவர்களினால் கண்கவர் நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்படவுள்ளதுடன், கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments