ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம், யாழ்ப்பாணத்தில் இன்று கைச்சாத்து.....

 ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம், யாழ்ப்பாணத்தில் இன்று (13) கைச்சாத்து.....



பிரதான 05 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வதென முடிவு செய்துள்ளன. இது தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று (13) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐந்து தமிழ் கட்சிகளுடன்...

இதனைத்தொடர்ந்து, ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருடன் 05 கட்சியினரும் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments