கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்.......

 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்.......

எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வருடாந்த கச்சதீவு திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (27.01.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் திருவிழாவுக்கான நிதித் தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு, பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பொலிஸ் பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஒலி, ஒளி வசதிகள், அலங்காரங்கள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், விருந்தினர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன், இந்திய தூதுவர் ராம் மகேஸ், வட மாகாண கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் தென்னக்கோண் மற்றும் யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், முப்படையினர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Comments