மின்சார மோட்டார் சைக்கிள்களை ஊக்குவிக்கும் திட்டம் வெரஹரவில் ஆரம்பம்........

 மின்சார மோட்டார் சைக்கிள்களை ஊக்குவிக்கும் திட்டம் வெரஹரவில் ஆரம்பம்........

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்களை பரப்பும் வேலைத்திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  (19)ம் திகதி ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்து மின்சார மோட்டார் சைக்கிள்களாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு அந்தந்த மோட்டார் சைக்கிள்களின் தரம் சரிபார்க்கப்பட்டது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்து, மாற்றப்படும் அனைத்து மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கும் குறிப்பிட்ட தரநிலையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

Comments