முதல் வாரத்தில் 2142 டெங்கு நோயாளர்கள் பதிவு.............

 முதல் வாரத்தில் 2142 டெங்கு நோயாளர்கள் பதிவு.............

2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்திற்குள் 2,142 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அங்கு 440 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பில் 433 பேர், புத்தளத்தில் 273 பேர், கல்முனையில் 147 பேர், யாழ்ப்பாணத்தில் 128 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 100க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments