KSC கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சாருகன்.....

 KSC கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சாருகன்.....


கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 2023ம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் அணித்தலைவராக சோமசுந்தரம் சாருகன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் ஆரம்ப பந்து வீச்சாரான இவர் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரராகவும் தன்னை இனங்காட்டி வந்துள்ளார். இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர், 19 வயதிற்குட்பட்ட  கிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டியில் பங்குபற்றியதுடன் தற்போது தன் பயிற்சிகளை மேற் கொள்வதற்காக கொழும்பு தமிழ் யூனியன் கழகத்துடன் இணைந்து பயிற்சி பெற்றுவருகின்றார்.

 



அத்துடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணியின் உதவி தலைவராக காலிதீன் முகமட் ரிபாஸ்  அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த விக்கெட் காப்பாளராகவும், ஒரு மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவும்  தன்னை நிலை நிறுத்தி செயற்படும் ஒரு வீரர் ஆவார். இவர் புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்துடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தலைவராக கோகுலராஜன் அவர்கள் தெரிவு செய்யபப்ட்டுள்ளார். கழகத்தின் சகல விளையாட்டுக்களிலும் தன்னை ஈடுபடுத்துவதுடன், கழகம் சார்ந்த சகல விடயங்களிலும் தன் அர்ப்பணிப்பான சேவையை வழங்கும் ஒரு வீரராக இவர் காணப்படுகின்றர். இவர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

எனவே தெரிவு செய்யப்பட்ட இம் மூன்று வீரர்களுக்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இவர்களுக்கான இப்பதவியானது ஒரு வருட காலத்திற்கு வழங்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.


Comments