KSCயின் தலைவராக சடாற்சரராஜா தெரிவு....

 KSCயின் தலைவராக சடாற்சரராஜா தெரிவு....

கோட்டைமுனை விளையாட்டு கழகத்pன் 2023/24ம் ஆண்டுக்கான தலைவராக சடாற்சரராஜா அவர்களை கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் ஏகமனதாக தெரிவு செய்துள்ளனர். 

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்தபொதுக் கூட்டமும் 2023/24 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் (04) அன்று மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் கழகத்தலைவர் சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் ராஜன் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சிவகுமார் அவர்களும், தாமரைக்கேணி கிராமசேவகர் பாக்கியநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தது விசேட அம்சமாகும்.

 இதன் போது புதிய நிர்வாகம் தெரிவின் போது 2022ம் ஆண்டு செயற்பட்ட நிர்வாக சபையையே மீண்டும் 2023/24ம் ஆண்டுகளுக்கு தெரிவு செய்வதாக ஒட்டு மொத்த அங்காத்தவர்களும் ஏகமனதாக தெரிவிக்க மீண்டும் சடாற்சரராஜா அவர்களின் கீழ் இயங்கிய நிர்வாக சபை தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டது.

இதன் போது கழக யாப்பு திருத்தியமைக்கப்பட்டதுடன், கழகத்தின் 50வது வருட நிகழ்வுகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளும் பற்றி கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் போசகர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















Comments