வட, கிழக்கில் கால்நடைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு......

 வட, கிழக்கில் கால்நடைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு......


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1660 ஆக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 206 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 329 விலங்குகள் நோய் வாய்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 555 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments