அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!!

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா இடம் பெற்றது.
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது.
அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலம் 19 நாள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் நிகழ்வு (28) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபரினால் மொழிப் பிரயோகததின் அவசியம் மற்றும் தாற்பரியம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் அரச திணைக்களத்தில் கடமையாற்றும் 57 உத்தியோகத்தர்கள் கற்கைநெறியினை பூர்த்தி செய்தனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட் சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட பொறியியளாலர் டி.சுமன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதாகரன், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் உதயராணி குகேந்திரன் , மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜிவானந்தன், கால்நடை வைத்தியர் டுஜித்திரா லிங்கேஸ்வரன், சிங்கள பாடநெறி வளவாளர்களாக பி.ஜி.ஆர்.டி.சுதர்சிக்கா, கே.நந்தினி மற்றும் எம்.கே.திலினி மதுசிகா மாவட்ட சிங்கள பாடநெறிக்கான இணைப்பாளர் வி.சந்திரகுமார் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் நான்காவது மொழி பயிற்சி நெறி என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் .














Comments