இந்துக்கல்லூரி மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு!!

 இந்துக்கல்லூரி மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசகருமான சிவஸ்ரீ.வீ.கே.சிவபாலன் குருக்களில் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணகசபாபதி ரஜனிகாந்த் தலைமையில் நடைபெற்றது.
சர்வமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாசன், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் உபதலைவர் சாஜகான் மெளழவி, மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி விமல ஹிர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்விற்கு அதிதிகளாக பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.ரவிராஜ், இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் ஆர்.வசந்தராஜா உள்ளிட்ட மேலும் பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த செயலமர்விற்கு பிரதான வளவாளராக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் கலந்து கொண்டு குறித்த செயலமர்வை நடாத்தியுள்ளார்.
இதன் போது சமகாலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாவும், அதனால் மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், மற்றும் இதனூடாக குடும்பங்களில் ஏற்படும் பின் விளைவுகள், சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாகவும் இதன் போது மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


















Comments