உணவு நெருக்கடியை தவிர்க்கும் முகமாக நெல் மூடைகள் வழங்கல்!!

 உணவு நெருக்கடியை தவிர்க்கும் முகமாக நெல் மூடைகள் வழங்கல்!!

உணவு நெருக்கடியை தவிர்க்கும் முகமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வட்டி அற்ற இலகு கடன் முறையில் நெல் மூடைகள் வழங்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் வடக்கு, தெற்கு, களுதாவளை மத்தி, 02, 03, 04, தேற்றாத்தீவு தெற்கு, பெரியகல்லாறு 02 மேற்கு ஆகிய மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் காமினி யூட் இன்பராசா அவர்களின் ஒருங்கிணைப்பில் வட்டி அற்ற இலகு கடன் அடிப்படையில் 173 நெல் மூடைகள் 173 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பொருளாதார மத்திய நிலையத்தில் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நெல் மூடைகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் மற்றும் மாதர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





Comments