உளவியல் ஆலோசனை மய்யத்தின் இரத்ததான முகாம்!!

 உளவியல் ஆலோசனை மய்யத்தின் இரத்ததான முகாம்!!



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் குருதிப் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மாபெரும் இரத்ததான முகாமொன்று (03)ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்" எனும் தொனிப் பொருளில் உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் குறித்த மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
உளவியல் ஆலோசனை மய்யத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ஆர்.அபராஜிதன் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் காலை 9:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணிவரை இடம் பெற்ற குறித்த இரத்ததான முகாமில் அதிகளவிலான இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் இரத்த வாங்கி பிரிவினர் வருகை தந்து இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்நிகழ்வில் உளவியல் ஆலோசனை மய்யத்தின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Comments