ஹெல்ப் எவர் அமைப்பின் இரத்த தான முகாம்.....

 ஹெல்ப் எவர் அமைப்பின் இரத்த தான முகாம்.....


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக, Help Ever Foundation இனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஆதரவோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாமிற்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மாலை 2.00 வரை சாள்ஸ் மண்டபத்தில் நடைபெறும். (KFC முன்பாக)

இரத்த தானம் செய்ய ஆர்வமுடைய அனைவரும் இவ் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தங்களால் முடிந்த இரத்த நன்கொடையை வழங்கி ஓர் உயிரின் இருப்புக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“மனித உயிர் அரியது. அதை காக்கும் இரத்தம் அளப்பரியது.”

இரத்தம் தானம் செய்வோம்! இன்னுயிர் வாழ காரணியாக இருப்போம்!

அத்துடன் உங்களது உன்னத சேவையை கௌரவித்து வைத்தியசாலையினால் அங்கீகரிக்கப்பட்ட இரத்தக் கொடையாளர்களுக்கான சான்றிதழும், ஹெல்ப் எவர் அமைப்பின் மூலமாக ஒரு சான்றிதழும்(Certificate) வழங்கி வைக்கப்படும். 

Comments