களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகம் திறப்பு.....
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகம் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் அவர்களினால் (02)ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் நிலுஜா சதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமுதாய அடிப்படை அமைப்பு) எஸ்.ஜசோபனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment