"மட்டு முயற்சியாண்மை - 2022" பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி ......

 "மட்டு முயற்சியாண்மை - 2022" பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி ......

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற "மட்டு முயற்சியாண்மை -2022" உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியானது நேற்று (12) திகதி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட 30 இற்கும் அதிகமான உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மல்ராஜ், கணக்காளர், எஸ்.விக்னராஜா, நிர்வாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே.உதயகுமார், மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலகத்தினால் சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .







Comments