இலங்கையின் முதலாவது கெமுனு படைப்பிரிவின் தமிழ் இராணுவ உத்தியோகத்தர் காலமானார்......

 இலங்கையின் முதலாவது கெமுனு படைப்பிரிவின் தமிழ் இராணுவ உத்தியோகத்தர் காலமானார்......



இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கெமுனு இராணுவப் படையணியின் முதலாவது படைப்பிரிவில் இணைந்து கொண்ட தமிழ் இராணுவ உத்தியோகத்தரான விஸ்வலிங்கம் என்பவர் தனது 90ஆவது வயதில்  காலமானார்.

1932 ஆம் ஆண்டு கைதடியில் பிறந்த விஸ்வலிங்கம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கெமுனுப் படைப்பிரிவில் இணைந்து கொண்டார். பயிற்சி சிப்பாயாக இணைந்து கொண்ட விஸ்வலிங்கம், இராணுவ ஆரம்பப் பயிற்சியை தியத்தலாவ இராணுவ முகாமில் முடித்தார். அதன் பின் கெமுனு படையணியில் உள்வாங்கப்பட்டு திறமை உள்ள ஓர் அதிகாரியாக லான்ஸ்கோப்ரல், கோப்ரல், சார்ஜன்ட் மற்றும் வர்ண சார்ஜன்ட் ஆகிய பதவி நிலை அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார்.  இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச் சடங்கு கெமுனு படைப் பிரிவு குண்டு மழை பொழிய இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



Comments