ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா.......

 ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா.....



மண்முனை பற்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா ஒரு தசாப்தத்தின் பின் 2022 ஆண்டு ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் என்.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் 2021,2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கும் பாடசாலை அதிபரினால் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் உட்பட சிறப்பு அதிதிகளாக வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொண்டனர்.

Comments