மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டி.....

 மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டி.....



மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.லவக்குமார் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அமைய மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் இரண்டு நாள் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு. பி.டி.பி.எ.உள்ளக அரங்கில் நடைபெறுகின்றது

100 நாள் செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 370 மாணவர்களை கொண்ட 37 பாடசாலைகளின் 13,15,17,19 ஆகிய வயதுடைய ஆண்,பெண் மாணவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கலவி அலுவலக பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவிராஜ் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் எம் தயானந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு கள்ளியங்காடு பி.டி.பி.எ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற இரண்டு நாள் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கான பரிசில்கள் நாளை நடைபெறுகின்ற இறுதிநாள் நிகழ்வின் பின் வழங்கப்படவுள்ளன.

Comments