மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு.......

 மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு.......



மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் நகர மண்டபத்தில்  (11)ம்  திகதி இடம்பெற்றது.

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை விருத்தி செய்யும் முகமாக பல போட்டிகள் மாநகர சபையினால் நடாத்தப்பட்டு அதில் தெரிவான மாணவர்களுக்கு இதன் போது பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது  மட்டக்களப்பு பொது நூலகத்தினால் அறிவுச்சுரங்கம் எனும் நூலின் மூன்றாவது பதிப்பும் வெளியிடப்பட்டது விசேட அம்சமாகும்.

இந் நிகழ்வில் அதிதிகளாக  கிழக்குமாகாணசபை முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் இதன் போது கலந்து கொண்டுள்ளனர்.















Comments