வெற்றிகரமாக முடிந்த இரத்ததான நிகழ்வு .......

 வெற்றிகரமாக முடிந்த இரத்ததான நிகழ்வு .......



களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும்  இரத்ததான நிகழ்வானது இவ் ஆண்டும்  5வது தடவையாக ஒழுங்கு செய்து மிகச்சிறப்பாக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந் இரத்ததான நிகழ்வானது  (09) காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை நடைபெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக   பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையிலும்  வழிகாட்டுதலிலும்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர்  கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும்  பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி இருந்தனர். பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் இவ் உன்னதமான பணிக்காக இரத்தம் வழங்கிய அனைத்து கொடையாளிகளுக்கு நன்றியை தெரிவிப்பதுடன், இவ் இரத்ததான நிகழ்வை தொடர்ந்து 05 வருடங்களாக ஏற்பாடு செய்து நடாத்தி வரும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்திற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.













Comments