ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுகூட்டம் ......

 ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின்  முன்னேற்ற மீளாய்வுகூட்டம் ......




மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் சென்று சமுர்த்தி திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி ஆராய்வதுடன், எதிர்காலத்தில் எவ்வாறு துரிதமாக மக்களுக்கு பணி செய்வது தொடர்பாகவும், தற்போது மக்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஆராய்வதற்காகவும் மற்றும் துரிதமாக செயற்படுத்த வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இக்குழுவினர் பிரதேச செயலங்கள் தோறும் சென்று வருகின்றனர். 

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று (செங்கலடி)  பிரதேச செயலகத்திற்கு (01) அன்று கள விஜயம் ஒன்றை மேற் கொண்டு இருந்தனர். இம்முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திற்கு ஏறாவூர் பற்று  பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது  இம்மீளாய்வு கூட்டத்தில் சமுர்த்தி வங்கி தொடர்பான விடயங்கள், கருத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள், கணக்காய்வு பிரிவுக்கான விடயங்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள், சமூக பாதுகாப்பு காப்புறுதி பிரிவுக்கான விடயங்கள், சமுர்த்தி நிவாரனம் தொடர்பான விடயங்கள், நிர்வாக பிரிவு தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் நேரடியாக கலந்துரையாடப்பட்டன. 

தற்போது வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணத்தை மாதாந்தம்  வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதில் கால தாமதம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டதுடன், புதிதாக சமுர்த்தி வங்கியூடாக வழங்கப்படும்  முதியோர் கொடுப்பணவுகளை முதியவர்களின் காலடியில் சேர்க்கும் வன்னம் விரைவாக செயற்படுத்துமாறும் கூறப்பட்டது. சமுர்த்தி வங்கியில் ஆளனி பற்றாக்குறை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்த பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. 

 மாவட்ட செயகத்தில் பணியாற்றும் சமுர்த்தி பிரிவினர் ஒரு குழுவாக  பிரதேச செயலகங்களுக்கு சென்று கடந்த கால   செயற்பாடுகளை மீளாய்வு செய்வதுடன் எவ்வாறு விரைவாக மக்களுக்கான பணியை இலவாக செய்வது தொடர்பாகவும் விளக்கமளித்து  வருகின்றனர். இதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வழி நடாத்தி வருகின்றார் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S,புவனேந்திரன் அவர்கள் என்றால் அது பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று  பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments