தேசிய மட்டத்தில் நடைபெற்ற டைக்குவாண்டோ (Taekwondo) போட்டியில் பதக்கங்களை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

 தேசிய மட்டத்தில் நடைபெற்ற டைக்குவாண்டோ (Taekwondo)  போட்டியில் பதக்கங்களை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!



மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேசிய ரீதியில் டைக்குவாண்டோ (Taekwondo) போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு SKO  விளையாட்டு களத்தில், அக்கழகத்தின் தலைவர் K.T.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

இதன் போது அகில இலங்கை ரீதியில்  இடம்பெற்ற பாடசாலை மட்ட டைக்குவாண்டோ  (Taekwondo) போட்டியில் பங்குபற்றி தேசியரீதியில் இம்மாவட்டத்திற்கான முதலாவது வெண்கலப்பதக்கத்தினை ஈட்டித்தந்து வரலாற்று சாதனை புரிந்த புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டியோன் செலர் மற்றும் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவன் வீ.கிருஷாந்தன் போன்றோர் விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன், மேலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் கராத்தே (Karate) மற்றும் டைக்குவாண்டோ (Taekwondo) போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை புரிந்த மாணவர்களும்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அம்மாணவர்களை கௌரவப்படுத்தியிருந்தார். 

அத்துடன் 2006ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 13 பதக்கங்களை தேசிய மட்டத்தில் இக்கழகம் வென்றெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

குறித்த இந்நிகழ்வின்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  நவரூபரஞ்ஜினி முகுந்தன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்  சுஜாதா குலேந்திரகுமார். அதிபர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், SKO விளையாட்டு கழகத்தின் செயலாளர் மதுபன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Comments