அகில இலங்கை விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டி தங்கம் வென்ற மட்டக்களப்பு மாணவன் சதீஸ்காந்...............

 அகில இலங்கை விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டி தங்கம் வென்ற மட்டக்களப்பு மாணவன் சதீஸ்காந்...............



அகில இலங்கை  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கம் வென்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந் அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு  (25) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

வரலாற்றில் முதல் தடவையாக பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது இதுவே முதல் தடவையாகும். இந்த வெற்றி கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

பாடசாலை அதிபர் அ.கு.லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்  சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு ஆலயபரிபாலன சபையின் நிருவாக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய வரவேற்பு நிகழ்வு மாணவர்களின் பாண்ட் வாத்தியங்கள் முழங்க நடை பவனியாக கண்ணகி மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபம் வரை சென்று அங்கு பாராட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

குறித்த மாணவனின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கு  அதிபரினால் நன்றி கூறப்பட்டதுடன், சாதனை படைத்து மாணவனிற்கு புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையினரால் பணபரிசு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments