ஏறாவூர் பற்றில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் நிகழ்வு.....

 ஏறாவூர் பற்றில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் நிகழ்வு.....



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மயிலம்பாவெளி அகரம் முன்பள்ளி சிறார்களின் போசனைத் தேவைகளை இனங்கண்டு சமுர்த்தி சிறுவர் முன்பராய வலுவூட்டல் போசனைவேலைத்திட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், மயிலம்பாவெளி கிராம உத்தியோகத்தர், மயிலம்பாவெளி பொதுச் சுகாதார பரிசோதகர், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி வலய உதவியாளர் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments