ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்......

 ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்......



ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் (18) நடைபெற்றது.

இதன்போது சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, சிறுவர்களுக்கான பரிசில்களும் முதியோர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கற்றல்  உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு  மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி  ஸ்ரீகாந் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மற்றும் இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சி.புவனேந்திரன்அவர்களும், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் அ.பிரபாகர் அவர்களும், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ப.விஸ்வகோகிலன் அவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  மற்றும் முதியோர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


























Comments