மட்டு மாவட்ட செயலகத்தில் களை கட்டிய வாணி விழா ......

 மட்டு மாவட்ட செயலகத்தில் களை கட்டிய வாணி விழா ......



மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தால் 2022ம் ஆண்டிற்கான வாணி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் (04) மாவட்ட செயலகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் கடவுள் வாழ்த்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பஜனை, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, நித்தியா விக்னேஸ்வரன் அவர்களின் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றிருந்தது.அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையுரையும், மாணவர்களுக்கான "கலைவாணி" கல்வி உதவி வழங்கும் நிகழ்வும், நித்தியா விக்னேஸ்வரன் நடனப்பள்ளி மாணவிகளின் குழு நடனம், பேச்சு, ஆன்மீக சொற்பொழிவு என்பன இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களினால் வாணி விழா பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலகத்தின் கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.











Comments