காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் ஆரம்பம்..............

 காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் ஆரம்பம்......



காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் (21) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தினால் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான வைபவம் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தாருள் அர்க்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் தலைவர் எம்.வை.சரீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறீகாந் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எஸ்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகரசபை செயலாளர் ரிப்கா ஷபீன், விவசாய விரிவாக்கத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பேரின்ப ராசா, தென்னை அபிவிருத்தி சபை பிராந்தி முகாமையாளர் ரி.எம்.ஹரீஸ், காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கமால்டீன் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் உறுப்பினர்கள், பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மரம் வளர்ப்போம் பசுமை தேசத்தை உருவாக்குவோம் எனும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் இதன் போது ஆரம்பிக்கப்பட்டது. இதில் தாருள் அர்க்கம் வளாகத்தில் தென்னை மரம் அதிதிகளினால் நடப்பட்டு மரம் நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காத்தான்குடி தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது.
பொது மக்களின் உதவியோடு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுமென ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கமால்டீன் தெரிவித்தார்.
பிறந்த தினங்கள், நினைவு தினங்கள் போன்றவற்றின் போது அவர்களின் நினைவாக மரங்களை அன்பளிப்பு செய்யுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கமால்டீன் மேலும் தெரிவித்துள்ளார்.






Comments