முதியோர், வலது குறைந்தோருக்கு உதவி தொகை காலடியிலேயே வழங்கி வைப்பு.........

 முதியோர், வலது குறைந்தோருக்கு உதவி தொகை காலடியிலேயே வழங்கி வைப்பு.........



சமுர்த்தி வங்கியின் ஊடாக முதியோர், வலது குறைத்தோர் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கான  உதவித்தொகை வழங்கும் நிகழ்வு (19) அன்று  கிரான்குளம் கிராம சேவகர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் காலடியிலேயே கொடுப்ப ணவுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  மண்முனைப்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்க முகாமையாளர்  க.புவனேந்திரன் அவர்களும், தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் U.L.சம்சுதீன் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பயனாளிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.









Comments