காத்தான்குடி அல் ஹிரா பாடசாலையில் விழிப்புனர்வு கருத்தரங்கு......

 காத்தான்குடி அல் ஹிரா பாடசாலையில் விழிப்புனர்வு கருத்தரங்கு......



 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் போதை பொருள் பாவனையை தடுப்போம் எனும் செயற்பாட்டிற்கு அமைய காத்தான்குடி சமுர்த்தி சமூக பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அல்ஹிரா பாடசாலையில் போதைப் பொருள் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கானது காத்தாண்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சிறுவர் தொடர்பான காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள், நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விரிவுரை வழங்கினர்.

இந்நிகழ்வுக்கு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments