மட்டு சமுர்த்தி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் கலந்துரையாடல்...

 மட்டு சமுர்த்தி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் கலந்துரையாடல்...



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சகல சமுர்த்தி முகாமையாளர்களையும் கணக்காய்வு அத்தியேட்சகர் A.M.மாகீர் அவர்கள் சந்தித்து சமுர்த்தியின் தற்போதைய, கடந்த கால நிலை பற்றி கலந்துரையாடினார்.


மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் (24) அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் K.கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு பல விடயங்களை முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார். 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் முகாமையாளர்கள் மற்றும் 14 பிரதேச செயலங்களில் கடமையாற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், சமுர்த்தி கருத்திட்ட முனாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் A.M.மாகீர் அவர்கள் கலந்துரையாடினார்.

இதன் போது கடந்த கால செயற்பாடுகள் பற்றியும், இனி வரும் காலங்களில் எவ்வாறு மக்களுக்கு திட்டமிட்டு விரைவாக பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார். மிக முக்கியமாக நலன் உதவி கொடுப்பணவுகள் மற்றும் சமூக நலன் கொடுப்பணவுகளை தாமதிக்காமல் மக்களுக்கு வழங்க ஆவனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.









Comments