மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் முன்னேற்ற மீளாய்வுகூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில்......

மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் முன்னேற்ற மீளாய்வுகூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில்......


மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களாக சென்று முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள், மற்றும் துரிதமாக செயற்படுத்த வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் செல்லவுள்ள இக்குழுவினர் முதல் தடவையாக வாகரை பிரதேச செயலகத்திற்கு 30.08.2022 அன்று விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். வாகரை பிரதேச செயலாளர் G.அருணண் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  மீளாய்வு கூட்டத்தில் சமுர்த்தி வங்கி பிரிவு, கருத்திட்ட பிரிவு, கணக்காய்வு பிரிவு, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பிரிவு, சமூக பாதுகாப்பு காப்புறுதி பிரிவு, சமுர்த்தி நிவாரன பிரிவு, நிர்வாக பிரிவு போன்றவற்றை பற்றி கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய சமுர்த்தி நிவாரணம் வழங்குதல், காத்திருப்போர் பட்டியலுக்கான கொடுப்பணவு வழங்குதல் போன்ற பணிகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. 
முதல் தடவையாக மாவட்ட செயகத்தில் பணியாற்றும் சமுர்த்தி பிரிவினர் ஒரு குழுவாக இக்கால கட்டத்தில் வாகரை பிரதேச செயலகத்தில் இச்செயற்பாட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வழி நடாத்தியது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் என்றால் மிகையாகாது.
இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

















Comments