மட்டு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு தெரிவான பட்டதாரி பயிலுனர்களுக்கு பணியிடங்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு......

 மட்டு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு தெரிவான பட்டதாரி பயிலுனர்களுக்கு பணியிடங்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு......



பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகளை முடித்த  பட்டதாரிகளுக்கான திணைக்கங்கள் ரீதியாக பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்திற்கு தெரிவான  பட்டதாரிகளுக்கான  பணியிடங்கள் வழங்கும் நிகழ்வு  11.03.2022 அன்று மாவட்ட செயலக சமுர்த்தி அலுவலகத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் பணியிட கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவர்களின் பணியடங்களாக சமுர்த்தி வங்கிகள, சமுதாய அடிப்படை அமைப்புக்கள், பிரதேச செயலகங்கள் என வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி திணைக்கள சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி நிர்வாக உத்தியோகத்தர் M.சசிதரன் அவர்களும் கலந்து கொண்டு பணியிட கடிதங்களை வழங்கி வைத்தனர். நிரந்தர பணி இடங்களை பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் நாளை 14.03.2022 அன்று தங்கள் கடமைகளை உரிய பிரதேச செயலகங்களில் கடமையை பொறுப்பேற்றகவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








Comments