மட்டு மாவட்டத்தில் One Stop Shop விழிப்பூட்டல் கருத்தரங்குகள்......

 மட்டு மாவட்டத்தில் One Stop Shop  விழிப்பூட்டல் கருத்தரங்குகள்......



மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி One Stop Shop  வேலைத்திட்டம் பற்றி விழிப்பூட்டல் கருத்தரங்குகள் தற்போது சகல பிரதேச செயலங்கிலும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முதல் விழப்பூட்டல் கருத்தரங்கு  31.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  S.புவனேந்திரன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், 14 பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இக்கருத்தரங்கானது 2022ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளில் புதிய மாற்றங்களையும், புதிய நடைமுறைகளையும் தெளிவூட்டும் விழிப்புனர்வு கருத்தரங்காகவே  இருந்தது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் இக்கருத்தரங்கு விபரங்களை கிராம மட்டத்தில் கொண்டு சென்று விழிப்பூட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுடன் இச் செயற்பாடு 31.03.2022 முன்னர் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக இவ்விழிப்பூட்டல் கருத்தரங்கு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல சமுர்த்தி வங்கிகளின் ஊடாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களுக்கும் நடைபெற்று வருகின்றன.

 

















Comments