காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு....

 காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு....



நாடுபூராவும் 14.02.2022 அன்று 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக அதிகரிக்கப்பட்ட நிவாரண தொகையை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு காத்தாண்குடி பிரதேச செயலாளர்  U.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பணவு வழங்கப்பட்டதுடன் புதிய காத்தான்குடி மேற்கு 167/D கிராமத்தை சேர்ந்த N.L.சமீமா அவர்களுக்கான சௌபாக்கியா வீட்டை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் கையளித்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் M.S.சில்மியா அவர்களும், நகரசபை உறுப்பினர் K.L.M.பரீட் அவர்களும், தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜா அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டர்.










Comments