ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வேலைத்திட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு......

 ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வேலைத்திட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு......



சமுர்த்தி திட்டத்தின் கீழ் வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களின் தலைமையில் சமுர்த்தி சௌபாக்கிய வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

06.01.2022 அன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.பஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி நிர்வாக உத்தியோகத்தர் கு.சசிதரன் அவர்களும் ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.



Comments