மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக எஸ்.புவனேந்திரன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்......

மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக எஸ்.புவனேந்திரன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்......




மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக சிசுபாலன் புவனேந்திரன் (SLAS) அவர்கள் 26.01.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்கள பிரிவின் காரியாலயத்தில் தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் இலங்கை நிர்வாக சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின்  சமுர்த்தி பிரிவிற்கு இணைத்துக் கொள்ளப்படும் முதல் பணிப்பாளர் ஆவார். 

 மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்று 1995ல்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று நகர்ப்புறப் பாடசாலையில் தம் கல்வியை தொட வாய்ப்பிருந்தும்  கூட தனது கிராமத்தில் உள்ள மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை பயின்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் சிறப்புக் கற்கை பயின்ற இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2011 – 2012 காலப்பகுதியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 2012 இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் முதல் உதவிப் பிரதேச செயலாளராக பசறை பிரதேச செயலகத்தில் நியமனத்தைப் கடமையாற்றி, பின்னர் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக  கடமையாற்றி வந்து குறிப்பிடத்தக்க விடயமாகும்.










Comments