மட்டு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு தெரிவான பட்டதாரி பயிலுனர்களுக்கு பிரதேச செயலகங்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு......

 மட்டு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு தெரிவான பட்டதாரி பயிலுனர்களுக்கு பிரதேச செயலகங்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு......



பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகளை முடித்த  பட்டதாரிகளுக்கான திணைக்கங்கள் ரீதியாக பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்திற்கு தெரிவான 22 பட்டதாரிகளுக்கான பிரதேச செயலகங்களுக்கான பணியிடங்கள் வழங்கும் நிகழ்வு  19.01.2022 அன்று மாவட்ட செயலக சமுர்த்தி அலுவலகத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களால் பணியிட கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

 இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், சமுர்த்தி நிர்வாக உத்தியோகத்தர் K.சசிதரன் அவர்களும், சமுர்த்தி முகாமையாளர் K.புவிதரன் அவர்களும், பொருளாதார உத்தியோகத்தர் I.ஸ்ரீதாஸ் அவர்களும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் முகமது றிஸ்கி பாத்திமா பமீதா அவர்களும் கலந்து கொண்டு பணியிட கடிதங்களை வழங்கி வைத்தனர். நிரந்தர பணி இடங்களை பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் நாளை 20.01.2022 அன்று தங்கள் கடமைகளை உரிய பிரதேச செயலகங்களில் கடமையை பொறுப்பேற்றகவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments