ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உள்ளீடு வழங்கி வைப்பு .....

 ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உள்ளீடு வழங்கி வைப்பு ..... 

200000 சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம்  நாடுபூராவும் பல்வேறு  வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது  200000 குடும்பங்களை மேம்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தில் சமுர்த்தி பயனாளி தன் தொழிலை விருத்தி செய்வதற்காக பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றது. எனவே இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான  தொழில்சார்  உள்ளீடுகளை  03.12.2021 அன்று ஓட்டமாவடி  பிரதேச செயலகத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குபட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

 ஓட்டமாவடி  பிரதேச செயலாளர் V.தவராஜா  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 30 சமுர்த்தி பயனாளிகளுக்கான உள்ளீடுகளை  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்கள் வழங்கி வைத்தார்.  

மேலும் இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக  கணக்காளர் திரு.சஜ்ஜாத் அவர்களும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.அஸீஸ் அவர்களும்,  பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.









Comments