ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வீட்டுத்தோட்டத்திற்கான நாற்று கன்றுகள் வழங்கி வைப்பு........

 ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வீட்டுத்தோட்டத்திற்கான நாற்று கன்றுகள் வழங்கி வைப்பு........

சமுர்த்தி பயனுகரிகளின் மணைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளின்  வீட்டுத்தோட்டத்தை விருத்தி செய்வதற்காக பழமரக்கன்றுகளும், தென்னங்கன்றுகளும்  ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களின் தலைமையில் 09.11.2021 அன்று வழங்கப்பட்டது.  

  இந்நிகழ்வில்   ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலக  சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்.S.A.M.பஸீர் அவர்களும்,  கருத்திட்ட முகாமையாளர் திருமதி.A.M.நிஹாரா  அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் M.I.M.இசாட் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  அவர்களும்,  மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


















Comments