மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்.....

 மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்.....



200000 சமுர்த்தி குடும்பங்களை மேன்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  வாழ்வாதார கருதிட்டத்திற்கான உள்ளீடுகள்  மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.கௌ.டினேஸ் அவர்களால் 2021.11.01  அன்று  சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

200000 வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை மேலும் வலுவடைச் செய்வதற்காக சமுர்த்தி திணைக்களத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன். இதன் மூலம் அவர்களின் தொழில் முயற்சியை ஊக்குவிக்க அத் தொழிலுக்கான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திலும் இந்நிகழ்வு இடம்பெற்றன.

இந்நிகழ்வானது மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  அ.குககுமாரன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக கணக்காளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், மற்றும் சமுர்த்தி அபிவிருத்து உத்தியோக்கத்தர்கள், கிராம உத்தியோகதர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 











Comments