வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்க சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு......

 வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்க சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு......



சமுர்த்தி பயனாளிகளின் மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காக    சமுர்த்தி பயனாளிகளுக்கு மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்ணகௌரி டினேஸ் அவர்களின் தலைமையில்  கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு 11.10.2021 அன்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  அ.குககுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக கணக்காளர் அவர்களும், திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும், கொக்காட்டிசோலை பிரதேச கால்நடை  வைத்தியர் அவர்களும், மற்றும் சமுர்த்தி  கருத்திட்ட முகாமையாளர் அவர்களும், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Comments