ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வாரம் முன்னெடுக்கப்பட்டது......

 ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வாரம் முன்னெடுக்கப்பட்டது...... 

 (U.L.M.அஸீஸ்)

2021 செப்டம்பர் 23 தொடக்கம் செப்டம்பர் 30ம் திகதி வரை  சௌபாக்கியா வாரத்தை நாடு பூராவும் செயற்படுத்திய வண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திலும் சௌபாக்கிய வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதன் போது சமுர்த்தி பயாளிகளுக்கான வீடுகள் மலசல கூடங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது  

 இந் நிகழ்வுகளில்  ஏறாவூர் நகர் பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  K.கணேசமூர்த்தி அவர்களும்,  சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.M.அஸீஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.   

சகலரும் சுகாதார முறையை கடைப்பிடித்து நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 

Comments