மிக விரைவில் சமுர்த்தி பயனுகரிகள் கைவசம் ஆகும் சமுர்த்தி ATM அட்டைகள்.....

 மிக விரைவில் சமுர்த்தி பயனுகரிகள் கைவசம் ஆகும் சமுர்த்தி ATM அட்டைகள்.....

இலங்கையில் தற்போது 1073 சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இந்த 1073 சமுர்த்தி வங்கிகளையும் தற்போது கணணி மயமாக்குவதற்கான பணிகள் கொவிட் காரணங்களையும் பாராமல் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டால் சமுர்த்தி பயனுகரிகளுக்கான சேவை துரிதப்படுத்தப்படும். இன்னும் அதை விரைவாக்கவே தற்போது  சகல வங்கிகளை போன்று சமுர்த்தி வங்கியும் ATM பரிவர்தனையை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான உத்தேச அட்டையின் வடிவத்தை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம். அத்துடன் சமுர்த்தி பயனுகரிகளுக்கான மாதிரி அடையாக அட்டையிளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

தற்போது ATM அட்டை பாவனையை துரிதப்படுத்துவதற்காக சமுர்த்தி வங்கிகளில் பொருத்தப்படவுள்ள ATM இந்திரங்களை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மிக விரைவில் தங்கள் கைகளிலும்  ATM அட்டைகளை தவளும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

1995ல் பரீட்சாத்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட சமுர்த்தி திட்டம் தற்போது நாடுபூராவும் 1073 சமுர்த்தி வங்கி கிளைகளை கொண்டு செயற்பட்டு வருகின்றது. சகல வங்கிகளைப்போன்று மக்களுக்கான சேவையை வழங்கி வருகின்றது. எனவே தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள ATM பரிவர்தனை சமுர்த்தி திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆங்கீகாரம் ஆகும்.







Comments