நாடுபூராவும் அன்பான வணிகன் சமுர்த்தி அபிமான சந்தை.....

 நாடுபூராவும் "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமான சந்தை.....

"அன்பான வணிகன்"  எனும் தலைப்பிலான சமுர்த்தி அபிமானி  சந்தை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமையாளர் திருமதி க.தேவமனோகரி தலைமையில் நடைபெற்றது.

2021 சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை சலுகை அடிப்படையில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் முகமாகவும் சமுர்த்தி உதவி பெறும் உற்பத்தியாளர்களின்  உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

 இவ் "அன்பான வணிகன்"  சமுர்த்தி அபிமானி சந்தையில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், தானியங்கள், உடைகள், பொதி செய்யப்பட்ட பொருட்கள் என பலவகையான பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் கோறளைப்பற்று  பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலிஅக்பர், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.கங்காதரன், மற்றும் பிரதேச செயலக சிரேஸ்ட உத்தியோகஸ்த்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

















Comments