மாவடி முன்மாரி சமுர்த்தி வங்கியின் "அன்பான வணிகன்" சமுர்த்தி சந்தை......
2021ம் ஆண்டின் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தால் "அன்பான வணிகன்" எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி சந்தை 07.04.2021 அன்று மாவடி முன்மாரி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை தாமே விற்பனை செய்து இதன் பயன்பாட்டை அடைவதுடன் மக்களுக்கு நியாமான விலையில் தரமான பொருட்களை பெற்றுக் கொள்வதுமே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வுக்கு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.தட்சனாகௌரி தினேஸ் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார். மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகஉதவி பிரதேச செயலாளர் திருமதி.மேனகா புவிக்குமார் அவர்களும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் செல்வநாயகம் பிரபாகரன் அவர்களும், கணக்காளர் மயில்வாகனம் முகிலன் அவர்களும், கலாச்சார உத்தியோகத்தர் சுந்தரலிங்கம் குபேசன் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் அழகிப்போடி குககுமாரன் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் தர்மலிங்கம் சபாரெத்தினம் அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment